95 சதவீதமான கடன்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன
விண்ணப்பத்தைப் பூரணப்படுத்துவதற்கு 5 நிமிடங்களே எடுக்கும்
பணத்தை வங்கிக் கணக்கில் பெற்றுக்கொள்வதற்கு 5 நிமிடங்களே ஆகும்
மிகுந்த சௌகரியத்துடன் ஒன்லைன் கடன்களை நாம் வழங்குகிறோம். கட்டணங்கள் எதுவுமின்றி இலவசமாக ஒரு சில நிமிடங்களில் Robocash உங்களுக்கான தொகையை வழங்கி வைக்கும்.
கடன் தன்னியல்பாக வழங்கப்படுகிறது.
விண்ணப்பிப்பதற்குத் தகுதியானவர் யார்?
21-65 வயதுடையவர்கள்
பணியமர்த்தப்பட்டுள்ள நபர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தொழில்துறை சார்ந்தோர்
இலங்கைப் பிரஜைகள்
அனைத்து செயல்முறைகளும் ஒன்லைனில் நடத்தப்படும் - நீங்கள் உங்களுடைய வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய தேவை இல்லை
உத்தரவாதியின் பங்குபற்றல், ஆவணங்கள் அல்லது உத்தரவாத வைப்புக்களை நாம் கோர மாட்டோம்
வெறுமனே 4 நிமிடங்களில் இலங்கை ரூபாய் 25,000 வரையானதொரு தொகையை உங்களுடைய வங்கிக் கணக்கில் பெற்றுக்கொள்ள முடியும்
சேவையானது முழுமையாகத் தானியங்கு முறையில் அமையப்பெற்றதாகும்
ஒன்லைன் வழியாக விண்ணப்பியுங்கள்
உங்கள் கோரிக்கையை ஏற்கச்செய்யுங்கள்
பணி தொடர்பான விபரங்கள்
மகிழ்ச்சி
ஒரு நிலையான வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கு நிதிசார் சுதந்திரம் அடிப்படையானது. நாம் நிதியியல் ரீதியாகச் சுதந்திரமாக இருக்க வேண்டுமெனில், கடினமாக உழைத்து, அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். ஆயினும், அனைவரும் அதில் வெற்றி கண்டு விடுவதில்லை. எமக்குத் தேவையான நேரத்தில் எமது நிதிசார் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கையில் ஒன்லைன் கடன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், எத்தனை பேர் துரிதக் கடன்களைப் பெறுவதில் எச்சரிக்கையாக உள்ளனர் என்பதையும், இந்தக் கடன் வழங்கல் தெரிவு குறித்து தப்பெண்ணம் கொண்டுள்ளனர் என்பது பற்றியும் கரிசனை கொள்ள வேண்டும்.
கடன் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் போது, கடனுடன் தொடர்புபட்டிருக்கும் நோக்கங்கள் நியாயமானவையா என்பதை மக்கள் பிரத்தியேகமாக மதிப்பீடு செய்துகொள்ள வேண்டும். உங்களிடம் புழக்கத்திலுள்ள பணத்தின் அளவை கருத்திற்கொண்டு கடன் தொகைக்கான செலவைத் தீர்மானிக்க வேண்டுமே தவிர, அதை மீறிச் செல்லக்கூடாது. ஒரு சாதுர்யமான அணுகுமுறையுடன், நீண்ட காலத்தின் அடிப்படையில் கடன் ஒன்று உங்களுக்குப் பயனளிக்கலாம்.
பொதுவாகக் கடன் பெறும் தெரிவாக நாம் அறிந்து வைத்திருப்பது, ஒரு பிரதான வங்கிக்குச் சென்று - இலங்கை வங்கி போன்ற வங்கிகள் - அவர்களிடமிருந்து குறிப்பிட்ட கடன் தொகையைப் பெற்றுக் கொள்வதாகும். ஆயினும், இலங்கையில், நாடு தழுவிய ரீதியில், வங்கிகள் யாவும் சமமான எண்ணிக்கையில் நிறுவப்பட்டிருப்பதில்லை. அதனால், கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் வங்கிக்குச் செல்வதற்காக பல மணித்தியலாங்கள் பயணம் செய்ய வேண்டும். இதன் காரணமாக, வாடிக்கையாளர்களின் பெறுமதிமிக்க நேரம், வரிசைகளில் காத்திக்கொண்டிருப்பதன் மூலமாகச் செலவழிக்கப்படுகின்றது. மேலும், கடினமானதொரு விண்ணப்பச் செயல்முறையைப் பின்பற்ற வேண்டும் என்பதால் வங்கிக் கடன்களுக்கு விண்ணப்பிப்பதில் மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
ஆனால், ஒன்லைன் கடன்களைப் பொறுத்தளவில். அது துரிதமானது மற்றும் இலகுவானது. ஒன்லைன் கடன் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக, வாடிக்கையாளர்கள் அவர்களுடைய தேசிய அடையாள அட்டையை மாத்திரமே சமர்ப்பிக்க வேண்டும்.
இது வங்கிக் கடன் பெறுவதை விட ஒன்லைன் கடன் பெறுவதை இலகுபடுத்துகிறது.
இலங்கையில் பல்வகைப்பட்ட தொழில்முறை சார்ந்த நிதியளிப்புத் தெரிவுகள் தற்போது காணப்படுகின்றன. இலங்கையிலுள்ள தனிநபர் கடன்களைக் கருத்திற்கொள்ளும் போது, வங்கிகள், அடகுக் கடைகள் மற்றும் ஒன்லைன் கடன்கள் முதலியன முன்னணி வகிக்கும் நிதிசார் வளங்களாக முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இலங்கையில் எங்கு ரூ. 60,000 கடனாகப் பெற்றுக்கொள்ளலாம் என்பதைத் தீர்மானிக்க, ஒவ்வொன்றையும் கருத்திற்கொள்ளுங்கள்.
கடன் ஒன்றைப் பெற எத்தனிப்பவர்களுக்கு மத்தியில் பிரபல்யமான தெரிவாக வங்கிகள் காணப்படுகின்றன. வாடிக்கையாளர் கடன்களுக்கு ஏற்ப, வீட்டுக் கடன், கல்விக் கடன், தளபாடங்களுக்கான கடன் போன்ற பல தரப்பட்ட தனிநபர் கடன்களை வங்கிகள் வழங்குகின்றன. எவ்வாறாயினும், வங்கிக் கடனுக்காக விண்ணப்பிப்பது 1 முதல் 5 நாட்கள் வரையான ஒரு நீண்ட காலத்தை எடுக்கும். மேலும், நீங்கள் தனிப்பட்ட ரீதியில் வங்கிக் கிளைக்கு வருகை தர வேண்டும். பல வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுத்த, ஒரு சாதகமான வீகிதத்தில் கடன்களை வங்கிகள் வழங்கி வந்தன. ஆயினும், தற்போது இலங்கையில் தனிநபர் கடன்கள் மீதான வீகிதங்கள்; பாரியளவிலான அதிகரிப்பைச் சந்தித்துள்ளன. அதிகமான வங்கிகள் உத்தரவாதி ஒருவர் அல்லது கடனை திருப்பிச் செலுத்துவதற்கான உத்தரவாதம் ஒன்றுடன் சேர்த்து ஒரு தொகை ஆவணங்களையும் வேண்டுகின்றனர்.
கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான உத்தரவாதமாகத் தனிநபர் உடைமைகளைப் பெற்றுக்கொண்டு துரித கடனை அடகுக் கடைகள் வழங்குகின்றன. அவர்கள் பொதுவாக ஆபரணங்கள் மற்றும் அது போன்ற பெறுமதியான பொருட்களை அடமானமாகப் பெற்றுக்கொள்கின்றன.
அடகு பிடிப்பவர்கள் வட்டி விகிதம் குறித்த எந்தவொரு விளக்கத்தையும் வழங்காமல் பணத்தை கடனாகக் கொடுக்கின்றனர். கடன் ஒன்றைப் பெற்றுக்கொள்ளும்போது, அடகு பிடிப்பவர்கள் விதிக்கும் வட்டி விகிதம் ஒப்பிடும் வகையில் அதிகமாக இருப்பது ஒரு பிரதான குறைபாடாகும். கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காகப் பெறப்படும் உத்தரவாதத்தின் மறுவிற்பனை விலையிலிருந்து 25% முதல் 60% வரை பொதுவாக அடகுக் கடைகள் கடன் வழங்குகின்றன. வாடிக்கையாளர் ஒருவர் 60,000 ரூபாயை அடகுக் கடை ஒன்றிலிருந்து கடனாகப் பெற்றுக்கொள்ள இருப்பின், உங்களுடைய மாற்றீடுகள் குறித்து ஆழ்ந்து சிந்திப்பது நல்லது. வங்கிக் கடன்களைப் போலவே, அடகுக் கடைகளும், தாம் வழங்கும் கடன்களின் வருடாந்த சதவீதத்தை திருத்தி அமைப்பதற்கான முழு சுதந்திரம் அவர்களுக்கு உண்டு. எவ்வாறாயினும், அடகுக் கடைகளிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்வதென்பது மிக மிகத் துரிதமானது; ஆனால், நீங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஒரு உத்தரவாதத்தை வழங்குவது கட்டாயமானதாகும். அடகுக் கடைகளிலிருந்து பணத்தைப் பெறுவதிலுள்ள இன்னுமொரு பிரதான குறைபாடுகளில் ஒன்றாக இதனைப் பார்க்க முடியும். மேலும், வாடிக்கையாளர் உரிய திகதியில் அல்லது உரிய திகதிக்கு முன்னர் செலுத்தத் தவறினால், நீங்கள் அடகு வைத்திருக்கும் பொருளில் எது தேவையற்றது என அவர்கள் கருதுவார்களோ, அதனை விற்பனை செய்வதற்கு அடகு பிடிப்பவர்கள் முழுமையாகத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்
வங்கி ஒன்றில் விதிக்கப்படும் விகிதத்தை விட ஒன்லைன் கடன்களில் விதிக்கப்படும் விகிதம் அதிகமாக இருந்தாலும்கூட, ஒவ்வொரு வருடமும் ஒன்லைன் கடன்கள் பிரபல்யம் அடைந்து வருகின்றன. பாரம்பரிய வங்கிக் கடனை விடவும் தனிநபர் ஒன்லைன் கடனை நாடுவதற்கான காரணம், அதிலுள்ள பல்வகை நன்மைகள் ஆகும்.
நீங்கள் கடனைப்பெற்றுக்கொள்ளும் தேவையைப் பொருத்து, இலங்கையிலுள்ள அதிகளவான ஒன்லைன் கடன்கள் நெகிழ்வான கடன் தொகைகளை வழங்குகின்றன. அவசர நிலைகளில் உடனடி நிதி வழங்கும் தீர்வுகளை ஒன்லைன் கடன் வழங்குநர்கள் முன்மொழிகின்றனர். ஒன்லைனில் தனிநபர் கடன் ஒன்றைத் தேடுவதன் மூலமாக, கடன் பெறுபவர்கள் எங்கிருந்தாலும் மிகப்பல கடன் முன்மொழிவுகளை எளிதாக மதிப்பீடு செய்ய முடியும். அதிகமான ஒன்லைன் கடன் வழங்குநர்கள், தமது வாடிக்கையாளர்களின் கடன் புள்ளிக்குப் (Credit Score) பாதகம் ஏற்படாமல் இருப்பதற்கு ஒரு முன்தகைமை செயல்முறையை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறது. ஒன்லைன் கடன் ஒன்றைப் பெற்றுக்கொள்ளும்போது, குறைந்த தொழிற்பாட்டுச் செலவு குறைநை்த வட்டி விகித்தை உருவாக்கும்.
Robocash எனப்படுவது இலங்கை முழுவதும் ஒன்லைன் கடன்களை வழங்கும், சட்டரீதியான மற்றும் அங்கீகாரம்பெற்ற கடன் வழங்குநர் ஆவர். ஒரு விரிவான கணினிமயப்படுத்தப்பட்ட ஒன்லைன் தளத்துடன் பரிணமித்துள்ளதுடன், செயல்திறன் மிக்கதாகவும் அது உள்ளது.
சாதகமான விதிமுறைகளுடன் தரமான நிதிசார் சேவைகளை எமது வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
ஒவ்வொரு விண்ணப்பத்தையும் அடிப்படையாகக் கொண்டு, கணினிமயப்படுத்தப்பட்ட கடன் வழங்கும் செயல்முறையானது தனித்து இயங்கும் தீர்மானங்களை மேற்கொள்வதுடன் சில மணித்தியாலங்களுக்குள் பணத்தைப் பரிமாற்றுகிறது. நாட்டில் மிகக் குறைந்த வட்டி வீதத்துக்கு துரித கடன் சேவைகளை நாம் வழங்குகிறோம். அங்கீகாரம் பெற்ற கடன் வழங்குநராக, எத்தகைய சலுகைகளும் இன்றி, நாம் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கண்டிப்புடன் பேணி வருகின்றோம்.
இது புதிய வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமானதொரு சலுகையாக இருக்கிறது - 0 சதவீத வட்டியில் ரூ. 5,000 முதல் ரூ. 25,000 வரையான கடனை அது வழங்குகிறது. அடுத்த கடனுக்கு வட்டி அறவிடப்படும் எனினும், உங்களுக்கு ரூ. 60,000 வரையான ஒரு தொகையைக் கடனாகப் பெற முடியும்.
உங்களுக்குச் சடுதியாகப் பணம் தேவைப்படும் போது Robocash தவிர்க்கமுடியாதது. தேவையான அளவு பணம் உங்களுடைய வங்கிக் கணக்குக்கு விரைவாகவும், எளிமையாகவும் வந்தடையும்!
கடன் சேவையிலிருந்து பயன்பெறுவதற்கு, வாடிக்கையாளர்கள் 21 முதல் 65 வயதுடையவர்களாக இருத்தல் வேண்டும். மேலும், தாம் இலங்கைப் பிரஜைகள் என நிரூபிப்பதற்காக அனைத்து வாடிக்கையாளர்களும் தமது தேசிய அடையாள அட்டையைச் சமர்ப்பிக்குமாறு வேண்டப்படுவர். தமக்கு ஒரு நிலையான வருமானம் இருப்பதாக நிரூபிக்கும் வரை கடன் பெறுபவர்கள் உத்தியோகபூர்வமாகக் கடன்பெறும் நடைமுறை ஒன்றைப் பேண வேண்டிய கட்டாயம் இல்லை.
ரோபோகேஷ் தனிநபர் கடன் கால்குலேட்டர் தளத்தின் பிரதான பக்கத்தில் அமைந்துள்ளது. எவ்வளவு திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதை அறிய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த விருப்பம் மிகவும் வசதியானது. நீங்கள் கடன் தொகையைத் தேர்வு செய்கிறீர்கள், மேலும் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையை கால்குலேட்டர் உங்களுக்குக் காட்டுகிறது. நீங்கள் தளத்தில் பதிவு செய்து கடன் விண்ணப்பத்தை நிரப்பலாம்.
மனிதத் தலையீடுகள் இன்றி, ஒன்லைன் கடன்களை வழங்கும் முழுமையானதொரு தானியங்கு சேவையாக Robocash காணப்படுகிறது. கடன் மதிப்பீடு, தீர்மானம் எடுத்தல் மற்றும் நிதிகளின் உடனடிப் பரிமாற்றம் ஆகியவற்றை முழுமையாக ஒப்பானவரிடை அடிப்படையில் (peer-to-peer basis) வழங்கும் கணினிமயப்படுத்தப்பட்டதொரு முறைமையாக Robocash காணப்படுகிறது. மனிதக் காரணி நீக்கப்பட்டுள்ளமையால் தவறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை. இந்த தொழிற்பாட்டுக்கான முறைமை மிகவும் நவீனமானது என்பதுடன் நிறுவனத்திற்கான செலவைக் குறைப்பதாகவும் இருக்கிறது. அதனால் தான் எம்மால் உங்களுக்குச் சாதகமான வட்டி விகிதங்களை வழங்க முடியுமாக உள்ளது.
உங்களுடைய பணம் உங்களுக்கு உடனடியாகக் கிடைக்கப்பெறும். உங்களுடைய விண்ணப்பத்தை செயல்முறைப்படுத்துவதற்கு 10 நிமிடங்கள் மாத்திரமே எடுக்கும். அத்தோடு உங்களுக்குத் தேவையான தொகையை 15 நிமிடங்களுக்குள் அனுப்பி வைப்போம்!
அனைவருக்கும் பயனுள்ள வகையில் அமைவதற்கு, இலங்கையில் குறைந்த வட்டி விகிதங்களுக்குத் தனிநபர் கடன்களை வழங்குகிறது. கடன் பெறுபவர்கள் மீளச் செலுத்த வேண்டிய மொத்தத்தொகையாகப் பணிக்கப்படுவது கடன் தொகையுடன் கூடிய அவரது வட்டி விகிதமாகும். எவ்வாறாயினும், புதிய வாடிக்கையாளர்கள் எந்தவொரு வட்டி அறவீடுகளும் இன்றி தம்முடைய முதலாவது கடனைப் பெற்றுக் கொள்ள முடியும்.
உத்தரவாதியை முன்னிலைப்படுத்துமாறு வாடிக்கையாளர்கள் வேண்டிக்கொள்ளப்படமாட்டார்கள். அது நேரம் எடுக்கும் செயல்முறை என்பதால், தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், கடன் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகத் திரும்பத் திரும்ப ஆவணப்படுத்தல் செயல்முறையில் கடன் பெறுபவர்கள் ஈடுபடுவதற்கான தேவை இல்லை. தேசிய அடையாள அட்டையை வழங்குவதன் மூலமாகக் கடன் பெறுபவர்கள் கடனைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பொதுவாக, கடன் ஒன்றுக்காக விண்ணப்பிக்கும் போது, வாடிக்கையார்கள் கடன் உடன்படிக்கையைக் கவனமாக வாசித்து, கட்டணங்கள் மற்றும் ஏனைய மேலதிக அறவீடுகள் மீது கவனம் செலுத்த வேண்டும். எமது கடன் சேவையுடன் தொடர்புடைய விண்ணப்பத்துக்கான செலவுகள் எதுவும் இல்லை.
விண்ணப்ப செயல்முறைப்படுத்தலை நாம் மிக மிகத் துரிதமாக மேற்கொள்கிறோம். மேலும், 95 சதவீதமான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதற்கு சான்றாகும்! பணத்தை துரிதமாகப் பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை நாம் புரிந்துகொண்டுள்ளோம்.
ஒன்லைனில் துரிதக் கடன் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கும் கடன் பெறுபவர் ஒருவர், நிறுவனம் குறித்த அனைத்துத் தகவல்களையும் ஆராய்வது முக்கியமானதாகும். எவ்வளவு காலமாகக் குறித்த நிறுவனம் கடன்களை வழங்கி வருகிறது என்பதையும், ஏனைய நாடுகளில் அதற்குக் கிளைகள் உள்ளனவா என்பதையும் கண்டறியுங்கள். குறித்த நிறுவனம் ஒரு சர்வதேச நிர்வாகத்தைக் கொண்ட நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமாக இருக்குமெனில், இது அதன் நம்பகத்தன்மையைக் காட்டுகிறது. உங்களுடைய இறுதித் தெரிவை மேற்கொள்வதற்கு முன்னர், நிறுவனம் தொடர்பாக சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மதிப்பாய்வை வாசிக்கத் தவறாதீர்கள்.
எந்தவொரு கடன் உடன்படிக்கையையும் கைச்சாத்திடுவதற்கு முன்பதாக, வருங்காலச் சிக்கல்களைத் தவிர்ந்துகொள்வதற்காக கடன் ஆவணங்கள் மற்றும் வரையறைகளை முழுமையாக வாசித்துப் புரிந்துகொள்ளுங்கள். குறிப்பாக, நீங்கள் எவ்வளவு காலத்தில் பணத்தை மீளச்செலுத்த வேண்டும், அதற்கான கால வரையறை என்ன, தவணை காலம் கடந்த கடன்களுக்கு எத்தகைய தண்டம் விதிக்கப்படும் என்பவற்றை அழுத்தமாக வாசித்துப் புரிந்துகொள்ளுங்கள்
உங்களால் மீளச் செலுத்த முடிந்த ஒரு தொகையை மாத்திரமே கடனாகப் பெற விண்ணப்பியுங்கள். உங்களுடைய கடனை உரிய நேரத்தில் செலுத்துவதற்கு உங்களுடைய உங்களிடம் புழக்கத்திலுள்ள பணத்தின் அளவைக் கவனமாகக் கணக்கிடுங்கள்.
கடன் பெறுபவர்கள் பணத்தை மீளச் செலுத்துவதில் தவணை கடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் கடன் தொகையை மீளச் செலுத்தும் வல்லமையை உறுதிப்படுத்துவது முக்கியமானதாகும். ஏதேனும் தவணை கடந்த கடன் தொகைகள் உங்களுடைய கடன் தரப்படுத்தல் மற்றும் வருங்கால கடன் சேவைகளுக்கான அணுகல் ஆகியவற்றைப் பாதிக்கும்.
21 முதல் 65 வயதுக்குட்பட்ட, செயற்பாட்டிலுள்ள தொலைபேசி இணைப்பையுடைய எந்தவொரு இலங்கை பிரஜையும் Robocashஇடமிருந்து கடன் பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம்.
அரசாங்கத்தால் விநியோகிக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை ஒன்றை விண்ணப்பதாரி சமர்ப்பிக்க வேண்டும்.
மறைமுக அறவீடுகள் இல்லை, முன்கூட்டிய கட்டணங்கள் அல்லது விற்பனைப் பங்குகள்
நாம் 24 மணித்தியாலமும் வாத்தின் 7 நாட்களிலும் எந்த விடுமுறையும் இன்றி திறந்திருக்கிறோம்.
இலகுவான கடன் விண்ணப்பச் செயல்முறை மற்றும் உடனடித் தீர்மானங்கள்
கடன் விண்ணப்பத்துக்கான பல்வகை முறைகள்: வலைதளம் மற்றும் தொலைபேசி App
கடன் ஏற்றுக்கொள்ளப்படும் வீதம் 90 சதவீதத்தை விட அதிகமாகும்
எந்தவொரு தேவைக்கும் கடன் வழங்கல்
சரியான கடன் தொகை மற்றும் கால அளவைத் தெரிவுசெய்வதற்கு ஒன்லைன் கடன் Calculatorஐ பயன்படுத்தல்.
உத்தரவாதி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான உத்தரவாதம் எதுவும் இன்றி கடன் வழங்கல்
தொடர்ச்சியாகப் பெறுபவர்களுக்கு சிறந்த கடன் வழங்கல்கள்
வங்கிக் கணக்குக் கூட இல்லாமல் கடன் வழங்கல்
பல்வகைக் கடன் மீள்கொடுப்பனவுத் தெரிவுகள் - வங்கிப் பரிமாற்றம், மீள்செலுத்துகை நிலையங்கள், மற்றும் Pay&Go முனையங்கள்
முதலாவது கடனுக்கு வட்டி எதுவும் இல்லாமல், ரூ. 5,000 முதல் 25,000 வரையான ஒரு தொகையைக் கடனாக Robocash வழங்குகிறது. வருமானம் மற்றும் அடையாள அட்டைச் சான்றிதழ் ஆகியவை மாத்திரமே தேவைப்பாடுகளாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
பணம் சம்பாதிக்க ஆரம்பித்துள்ள, கடன் தொகையைப் பெற்றுக்கொள்வதில் முதற்படியை எடுத்து வைக்கும் எவருக்கும் வட்டியில்லாத் துரிதக் கடன் வழங்கல் ஒரு பெரும் உதவியாக இருக்கும்.
ஆரம்ப நிதிசார் கடமைகளை சமாளிப்பதற்கு கடன் சுறாக்கள் மீது அளவுக்கதிகமாகத் தங்கியிருப்பதை இல்லாமல் ஆக்குவதுடன், வருங்காலத்தில் சிறந்த கடன்களை வழங்குவதற்காக கடன் பெறுபவரின் சாத்தியப்பாடுகளையும் மேம்படுத்துகிறது.
இணையத் தொடர்பைப் பேணுவதற்காக தொகையில் அதிகரித்து வரும் இலங்கைப் பிரஜையினர் தம்முடைய அடிப்படைச் சாதனமாக Smartphoneகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
Robocash mobile App நன்றாக மேம்படுத்தப்பட்டு பல வகையான சிறப்பம்சங்களுடன் காணப்படுகின்றது. இணையம் தொடர்பான அறிவுள்ள இலங்கைப் பிரஜைகளுக்கு ஒன்லைன் சார்ந்த கடன் வழங்குவதன் பயன்களைத் தடையின்றி அனுபவிக்க உதவுகிறது. வங்கிகளில் காணப்படக்கூடிய நீண்ட வரிசைகளை நீங்கள் தவிர்ந்துகொள்ள விரும்பினால், உங்களுடைய கையடக்கத் தொலைபேசி மூலமாக ஒன்லைன் கடன் ஒன்றுக்கு விண்ணப்பியுங்கள். Android அல்லது Appleக்கான Mobile Applicationஐ நீங்கள் தரவிறக்கம் செய்து, அதன் சௌகரியத்தை அனுபவித்திடுமாறு நாம் உங்களுக்குப் பரிந்துரைக்கிறோம். பயனர்களால் அது அதிகம் மதிப்பிடப்பட்டுள்ளதோடு, அதன் உதவியுடன் முன்னர் பணம் பெற்றவர்களின் எண்ணிலடங்கா நேர்மறையான பின்னூட்டல்களையும் கொண்டிருக்கிறது.
கடன் தொகை மற்றும் கடனுக்கான கால அளவு ஆகியவற்றைப் பொருத்து, ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு தேவைப்பாடுகள் உள்ளன. கடன் தொகை மற்றும் கடனுக்கான கால அளவு ஆகிய ஒவ்வொரு இணைவுப் பொருத்தத்துக்குமான துல்லியமான மீள்கொடுப்பனவுத் தொகையைக் காட்டும் ஒரு அபூர்வமான கருவியாக எமது ஒன்லைன் கடன் calculator காணப்படுகிறது.
அது தொடர்பாக ஒரு மாதிரி கணக்கீட்டைப் பார்ப்போம்.
நீங்கள் ரூ.50,000 கோரி, 6 மாத கால அளவுக்கு அதிகமான ஒரு கால அளவை மீள்கொடுப்பனவுக்காகத் தெரிவுசெய்தால், உங்களுடைய மாதாந்த கட்டணம் ரூ. 8,948ஆக மட்டுமே இருக்கும், கடனுக்கான உங்களுடைய மொத்தச் செலவு மாதாந்தம் ரூ. 615 (APR = 15%)*
உற்பத்தி தொடர்பான முழு விபரங்களையும் அறிந்துகொள்வதற்கு விதிமுறைகளையும், வரையறைகளையும் பாருங்கள்.