முதற்தொகை

முதற்தொகை

Rs 25 000.00

உங்களுடைய அனைத்துத் தரவுகளும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன.

    அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள்

    Robocash சேவை கடன் செயல்முறையை எவ்வளவுதான் எளிமையாக்கினாலும், உங்களுக்கென சில கேள்விகள் இருக்கலாம். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான விடைகளை நாம் இங்கு வழங்குகிறோம்.

    robot

    கடனைப் பெற்றுக்கொள்ளுதல்

    • நான் எப்படி கடன் பெற முடியும்?

      பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு நீங்கள் கடன் ஒன்றைப் பெற்றுக்கொள்ளலாம்:

      • இலங்கைப் பிரஜையாக இருத்தல்; 21 முதல் 65 வயதுடையவராக இருப்பதுடன், செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை ஒன்றை வைத்திருத்தல்

      • உங்களுடைய கையடக்கத் தொலைபேசி இலக்கம் தடைபடாமல் இருத்தல்

      • நீங்கள் இணையதளத்தில் பதிவுசெய்திருத்தல்

      உங்களுடைய முதலாவது கடனை முழுமையாக நீங்கள் செலுத்திய பின்னர், எமது தவணைக் கடனை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். தொடர்ச்சியாகக் கடன் பெறுபவர்கள் மாத்திரமே எமது தவணைக் கடனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

    • தேவைப்பாடுகள் யாவை?

      மேலதிக செல்லுபடியாக்கத்துக்கு அது தேவைப்பட்டாலொழிய, நீங்கள் ஏற்கனவே தொடர்ச்சியாகக் கடன் பெறுபவராக இருப்பின் எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டிய தேவை இல்லை.

      தொடர்ச்சியாகக் கடன் பெறுபவர்கள் தானாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாக ஆகிவிடுவார்கள்.

    • எத்தகைய தொகையை எனக்குக் கடனாகப் பெற்றுக்கொள்ள முடியும்?

      உங்களுக்கு ரூ. 5,000 முதல் 25,000 வரை கடனாகப் பெற முடியும்

    • எப்போது எனக்கு விண்ணப்பிக்க முடியும்?

      எப்போது வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் நீங்கள் விண்ணப்பிக்கலாம். எமது இணையத்தளமான www.robocash.lkஇல் அல்லது googleplaystoreஇல் உள்ள எமது விண்ணப்பத்தின் ஊடாக உங்களுக்கு ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.

    • இந்தக் கடன் சேவைக்கான வட்டி வீதம் யாது?

      நீங்கள் விண்ணப்பிப்பதற்கு முன்னர் credit calculatorஇல் மீள்கொடுப்பனவுத் தொகை குறிப்பிடப்பட்டுள்ளது.

      நீங்கள் பெற்றுக்கொள்ள விரும்பும் கடன்தொகையில் வட்டி விகிதம் தங்கியுள்ளது. நீங்கள் உரிய நேரத்தில் செலுத்தினால் ஏனைய கட்டணங்கள் எதுவும் அறவிடப்படமாட்டாது.

    • கடன் ஒன்றைப் பெற்றுக்கொள்வது கடினமானதா?

      அவை எதுவும் சிக்கலுக்குரியவை அல்ல. தேவையான தரவுகள் மற்றும் நீங்கள் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் முறையும் தொகையையும் படிவக் கட்டங்களுக்கு (form fields) உட்செலுத்தினால், Robocash உங்களுக்கு உடனடியாகப் பணத்தை அனுப்பி வைக்கும்

    • என்னுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பணம் எப்போது எனக்குக் கிடைக்கப்பெறும்?

      உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டவுடனேயே கோரப்பட்ட தொகை அனுப்பிவைக்கப்படும். பணம் கிடைக்கப்பெறும் துரிதம் நீங்கள் கணக்கைப் பேணும் வங்கியைப் பொறுத்தது என்பதுடன், 1-2 நாட்கள் வரை எடுக்கலாம்.

    • எனக்கு இன்னுமொரு கடனைப் பெற்றுக்கொள்ள முடியுமா?

      ஒவ்வொரு வாடிக்கையாளருக்குமான தனிநபர் வரம்பை Robocash சேவை வரையறுத்துள்ளது. முந்தைய கடன்களுடன் தொடர்புடையதாகச் செலுத்த வேண்டிய கடந்தகால நிலுவைக் கொடுப்பனவுகள் இல்லாது விடுத்து, இவ்வரம்புகளுக்கு உட்பட்டதாக மேலும் ஒரு கடன்தொகையைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறது.

    • கடன் பெறுவதற்கான வரம்பு அதிகரிக்கப்படுமா?

      முந்தைய கொடுப்பனவை மீளச்செலுத்திய உடனேயே கிடைக்கக்கூடிய கடன் தொகையை இயல்பாகவே Robocash அதிகரிக்கிறது. முந்தைய கடன் தொகையை மீளச் செலுத்தியவுடன், உடனடியாக அடுத்த கடன் தொகை கிடைக்கப்பெறும்.

    • என்னுடைய விண்ணப்பத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதை நான் எவ்வாறு அறிந்துகொள்வது?

      உங்களுடைய தனிநபர் கணக்குப் பகுதியில் தேவையான அனைத்துத் தகவல்களையும் உங்களுக்கு அறிந்துகொள்ளலாம். படிவத்தை சமர்ப்பித்த பின்னர், தகவல்கள் அங்கு காட்சிப்படுத்தப்படும். Robotcash ஒரு உடனடித் தீர்மானத்தை மேற்கொள்ளும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், SMS Codeஐ உட்செலுத்துவதன் மூலமாக உடன்படிக்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

    • கடன் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது எனினும், பணம் ஏன் பரிமாற்றம் செய்யப்படவில்லை?

      உடன்படிக்கை உறுதிப்படுத்தப்பட்ட உடனேயே கோரப்பட்ட தொகையை நாம் அனுப்பிவைப்போம். அதன் பின்னர், பணத்தைப் பெற்றுக்கொள்ளும் துரிதம் உங்களுடைய வங்கியைச் சார்ந்ததாகும். பொதுவாக, பரிமாற்றமானது 2 நாட்களுக்குள் இடம்பெற்றுவிடும்.

    • Robocash இன் குறுஞ்செய்தி வந்தடையாவிட்டால் என்ன செய்வது?

      உங்களுடைய கையடக்கத் தொலைபேசியை restart செய்யுங்கள். இன்னமும் குறுஞ்செய்திகள் உங்களை வந்தடையாவிட்டால், உங்களுடைய memoryஐச் சரிபாருங்கள். அது நிரம்பி இருப்பின், தேவையற்ற குறுஞ்செய்திகளை அழித்துவிட்டு, spaceஐ ஏற்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுடைய கணக்கு மீதி மற்றும் SMS Service Settings ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இச்செயல்பாடுகளைத் தொடர்ந்து, SMSஐ மீண்டும் அனுப்பிவைக்குமாறு இணையதளத்தில் கோரிக்கை ஒன்றை முன்வையுங்கள். உங்களுக்கு இப்போதும் குறுஞ்செய்திகள் வாராவிட்டால், உங்களுடைய சிக்கல், தொலைபேசி இலக்கம், மற்றும் தொலைபேசி இயக்குநர் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, support@robocash.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வையுங்கள்.

    • நான் என்னுடைய வங்கிக் கணக்கு இலக்கத்தைத் தவறாக உட்செலுத்தியுள்ளேன். இப்போது நான் என்ன செய்வது?

      இத்தகையதொரு தவறு ஏற்பட்டுவிட்டால், குறிப்பிடப்பட்டுள்ள அரசாங்கத் தரவுகளுடன் உங்களுடைய கணக்கு இலக்கம் பொருந்துவதில்லை என்பதால் நீங்கள் பணத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டீர்கள். அனுப்பப்பட்ட பணம் 2 வாரங்களுக்குள் Robocash சேவைக்கு மீளத்திருப்பி அனுப்பப்படும். அதன் பின்னர், வட்டி அல்லது விற்பனைப் பங்கு இன்றி கடன் ரத்துச்செய்யப்படும். சரியான வங்கிக் கணக்கு விபரங்களை உட்செலுத்தி, ஒரு புதிய விண்ணப்பத்தை உங்களால் தயாரிக்க முடியும். நீங்கள் உட்செலுத்தும் தனிநபர் தகவல்கள் தொடர்பாகக் கவனமாக இருங்கள்!

    • விண்ணப்பத்தை ரத்துச் செய்ய முடியுமா?

      உடன்படிக்கை கைச்சாத்திடும் நிமிடம் வரை இதனைச் செய்யலாம். கைச்சாத்திடப்பட்டவுடன் பணம் உடனடியாக அனுப்பி வைக்கப்படும். இவ்விடயத்தில், குறைந்தளவு வட்டியுடன் உங்களுக்குக் கடனை முன்கூட்டிச் செலுத்த மட்டுமே முடியும். robocash.lk customer service அல்லது உங்களுடைய தனிநபர் கணக்கில் நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும் கணக்கை சரிபார்த்துக் கொள்ள முடியும். நீங்கள் உடன்படிக்கையை உறுதிப்படுத்தாவிட்டால், support@robocash.lkக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வையுங்கள்.

    • விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வதற்கும், தொகையைப் பெற்றுக்கொள்வதற்கும் எவ்வளவு காலம் எடுக்கும்?

      நீங்கள் உடன்படிக்கையை உறுதிப்படுத்திய ஓரிரு நிமிடங்களில் உங்களுடைய பணத்தை நாம் அனுப்பி வைப்போம். அதன் பின்னர், அது வங்கியின் செயல்பாடுகளிலேயே தங்கியிருக்கிறது. 8.00 முதல் 16.00 மணி வரையான வேலை நேரங்களில் ஒரு வாரத்திற்குள் உங்களுக்குப் பணம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். இவ்விடயத்தில், விண்ணப்பத்தை இரவில் ஏற்றுக்கொள்வதென்பது அடுத்த நாள் காலை பணத்தைப் பெற்றுக்கொள்வதைச் சாத்தியப்படுத்தும். விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளும் செயல்பாடு வார இறுதி நாட்களில் நடைபெறும் எனில், திங்கட்கிழமை காலை உங்களுக்குப் பரிமாற்றம் வந்தடையும்.

    • ஒரு மூன்றாந்தர நிறுவனத்தில் இன்னும் செலுத்தப்படாத கடன் ஒன்று எனக்கு உள்ளது. இவ்விடயத்தில் என்னுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுமா?

      நீங்கள் கொடுப்பனவுகளை உரிய நேரத்தில் செலுத்தினால், Robocash பெரும்பாலும் ஒரு நேர்மறையான முடிவை எடுக்கும்.

    • எனக்குக் கடன் மறுக்கப்பட்டால் என்ன செய்வது?

      நீங்கள் சட்டரீதியான வயதை அடைந்து, எப்போதும் உரிய நேரத்தில் கடன் கொடுப்பனவுகளை மேற்கொண்டிருந்தால், அப்போது ஏதேனும் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். விண்ணப்பத்தை மீண்டும் ஒருமுறை நிரப்பி அனுப்புவதற்கு முயற்சி செய்யுங்கள். எவ்வளவு அதிகமாக நீங்கள் தனிநபர் தரவுகளை குறிப்பிடுகிறீர்களோ, அந்தளவுக்கு உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.

    கடன் பெற்றுக்கொள்வதற்கான செயல்முறையில் ஈடுபடுவதற்கு முன்பு, விதிமுறைகளையும், வரையறைகளையும் தயவுசெய்து பார்வையிடுங்கள்

    Robocash LK Services operates the website robocash.lk and is providing consulting, information, and marketing services and facilitates the loan process. Robocash LK Services is not acting as a lender or loan provider.

    Rapilend (தனியார்) நிறுவனம்

    பதிவிலக்கம்: PV00235761

    இல. 04 கீதாஞ்சலி ப்லேஸ், லெவல் 5, கொழும்பு 03

    ROBOCASH LK SERVICES (PVT) LTD.

    Registration No. PV00232134

    No.4, Geethanjalee Place, Level 4, Colombo 03

    support@robocash.lk

    © ROBOCASH 2021

    • facebook